இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குலதெய்வம்.

படம்
கடவுள் ஒன்று. இறை நான்கு. தெய்வங்கள் பல. தமிழ்முன்னோர் நிறுவியுள்ள முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில்- இடம் என்பது விசும்பு என்கிற திரம், அது கடவுள் என்றும் பேசப்படுகிறது. காலம் என்பது அடிப்படையில் தனிஒன்றுகள், வழிநிலையில் நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகள் அது இறை என்றும் பேசப்படுகிறது.  ஆற்றல் மூலமான இந்த, கடவுளும், இறையுமே இயற்கையின் அனைத்து உருவாக்கங்களிலும் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி, நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு. நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர்.  கடவுள் கூறையும், இறைக் கூறையும் தெய்வமாக வழிபடுவது தமிழர் மரபு. கடவுள் ஒன்றே ஒன்று. இறை நான்கு. அவற்றின் கூறுகளாக அமைந்த தெய்வங்கள் பற்பல. ஐந்திரம் என்ற பொருள்பொதிந்த சொல்லில் தமிழர் நிறுவிய ஐந்து திரங்கள் இந்தக் கடவுளும் இறையும்.  தெய்வங்கள் மூன்று வகைப்படும். 1. கடவுள்கூறு தெய்வம் 2. இறைக்கூறு தெய்வம் 3. குலதெய்வம் கடவுள்- வெளி, விண்வெளி, விசும்பு என்கிற மூன்று நிலைகளை உடைய ஒற்றைத் திரம் ஆகும். இறை- நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகள...

பொன்னம்மாள்.

படம்
குலதெய்வம்: பொன்னம்மாள். காலமாகி, குலதெய்வம்ஆன நாள்: செவ்வாய்க் கிழமை. 25ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5094. (10.11.1992) அம்மா: அம்மணி அப்பா: வெங்கடாச்சலம் கணவர்: ருக்மாங்கதன் வாழ்க்கைப்பாடுகள்:  திருமணத்திற்கு முன் உழத்தி திருமணத்திற்குப் பின் குடும்பத்தலைவி கணவரின் குலதெய்வ நிலைக்குப் பின் சித்தமருத்துவம். பிள்ளைகள்: 1. தர்மாங்கதன் 2. கோபாலசாமி 3. பேபி 4. பிரேமா 5. செயபாலன் 6. தம்பி 7. தனலட்சுமி 8. செல்வக்குமார் 9. விசயலட்சுமி 10. குமரிநாடன். மருமக்கள்: 1. காவேரி. தர்மாங்கதனின் மனைவியாக 2. அம்சா. செயபாலனின் மனைவியாக 3. அருணாச்சலம். தனலட்சுமியின் கணவராக. 4. கோமதி. செல்வக்குமாரின் மனைவியாக 5. திராவிடமணி. விசயலட்சுமியின் கணவராக 6. நாகரத்தினம். குமரிநாடனின் மனைவியாக பேரப்பிள்ளைகள்: அ. தர்மாங்கதன் காவேரி இணையரின் மக்களாக: 1. தேன்மொழி 2. மணிமொழி 3. சரவணமொழி 4. வண்ணக்கிளி 5. கவிதா 6. மதியழகன் 7. பாபு ஆ. செயபாலன் அம்சா இணையரின் மக்களாக: 1. அன்புச்செல்வி 2. பாபு 3. லெமுரியன் 4. உமா இ. தனலட்சுமி அருணாச்சலம் இணையரின் மக்களாக: 1 இராசகுமார் 2. உதயகுமார் 3 மதுபாலன் 4. சந்திரா 5. மலர்விழி ஈ. செல்வக்...